Friday, October 30, 2015

நானும் என்னவனும் - பகுதி7

ராஜா மற்றும் அவனோட ரூம்ல உள்ள இன்னொரு பய்யன் 2 பேர் கூடையும் ரொம்பவே க்ளோஸ் ஆ பழக ஆரம்பிச்சேன்... இதுல ராஜா கொஞ்சம் நமக்கு செட் ஆகுற மாதிரி தெரிஞ்சான்.. இன்னொரு பய்யன் அவன் ஏதோ நியாயமா இருக்கேன்னு சொல்லிட்டு மொக்க தனமா
பேசிகிட்டு இருந்தான் அதனால இவன் நமக்கு செட் ஆக  மாட்டணு சொல்லிட்டு என்னோட முழு கான்சென்றேசன் ராஜா மேல வச்சேன்.  அவன் கூட ப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் பேசிகிட்டே இருந்தேன்..


அவனும் நா பேசும் போது நெறைய கதை சொல்லுவான்.. அவனோட பாமிலி, ஸ்டடீஸ் , ஸ்கூல் காலேஜ் லைப் இதெல்லாம் பத்தி சொல்லிகிட்டே இருப்பான். அப்போ அவன் சொல்ற கதையெல்லாம் நா நல்ல கேட்டுகிட்டே இருப்பேன்.. இப்படி போய் கிட்டு இருக்குற நேரத்துல
என்னோட ரூம் மேட்ஸ் க்கும் எனக்கும் நடந்துட்டு இருக்குற பிரச்சினை என் டீம் லீடர் க்கு தெரிஞ்சிடுச்சி.. ஒரு நாள் அவர் என்ன கூப்பிட்டு காட்டு காட்டுன்னு கட்டுனார்.. ஊர் விட்டு ஊர் வந்து உங்களுக்குள என்ன பிரச்சினை ஒத்துமையா தெரியாதா நீங்கலாம் ஒரு
ப்ரோபிசனால் நு வெளிய சொல்லாதீங்க...இனிமேல் ஒத்துமையா இருங்க நு சொல்லி அட்வைஸ் பண்ணுனார்..  நானும் நடந்த எல்ல விசயத்தையும் சொன்னேன்..


அட்வைஸ் பண்ணுனா மட்டும் நாங்க செந்துருவோமா என்ன ?? அது அவருக்கும் தெரியும் போலிருக்கு அதுனால எங்க ரூம்ல என்ன தவிர மத்த 2 பெரும் என்னோட டீம் தான் சோ எங்க 3 பேரையும் பக்கத்துல பக்கத்துல உக்கார வச்சார்.. பக்கத்துல உக்கார வச்சாலும் நாங்க
முதல்ல அவ்வளவா பேசிக்கல.. அதையும் என்னோட டீம் லீடர் கவனிசிட்டேர் இருந்தார். குண்டனுக்கு எதாச்சும் இஸ்சு பிக்ஸ் பண்ணனும்னா என்னதான் போக சொல்லுவார்..அப்போ அவனும் ஏன் கிட்ட பேசி தான் ஆகணும் நானும் அவன் கூட பேசித்தான் ஆகணும்...டவுட் நு
வரும் போது கண்டிப்பா பேசி தானே ஆகணும்.. அதே மாதிரி அவர் போட்ட பிளான் கரெக்ட் ஆஹ் வொர்க் ஆச்சு.. குண்டன் ஏன் கூட நல்ல பேசினான்.. அவன் பேசுறத பாத்தா கரிவாயனும் பேச ஆரமிசிட்டன்....ஏன் ரூம் காரங்க 2 பேரும் என் கிட்ட பேசுனாங்க.. கிட்ட தட்ட ஒரு 8
மாசமா பேசாதவங்க அப்ப பேசும் போது எனக்கு கொஞ்சம் சந்தோசமா இருந்துச்சி..
அதுவர சோ சாட் ஆ போன என்னோட லைப் கொஞ்சம் ஜாலி பன் ஆ போக ஆரமிசுது... இந்த டைம் தான் ராஜாவும் என்கூட ரொம்பவே க்ளோஸ் ஆக ஆரமிச்சான்.. எல்லாரும் என்கூட பேசுனாலும் என்னோட டார்கெட் ராஜா தான்.. அவன எப்படியாவது என்னவனா
மாத்தணும்னு தான் என் மைண்ட் புல்லா ஓடிட்டு இருந்துச்சி.. அவன் கூட க்ளோஸ் ஆ பழக பழக தான் அவன பத்தி கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சி கிட்டேன்...


ராஜா வ கரெக்ட் பண்ண ரெண்டே ரெண்டு விஷயம் தான் இருக்கு வேற எத வச்சும் அவன கரெக்ட் பண்ண முடியாது..அந்த 2 விஷயம் என்னன்னா
                   1) சாப்பாடு
                   2) அவன் பண்றத அப்ரீசியெட் பண்ணனும் இல்லனா எந்த ஒரு வேலைனாலும் அவனுக்கு பண்ண சான்ஸ் குடுக்கணும்..


இந்த 2 விஷயத்த வச்சி அவன கரெக்ட் பண்ணலாம்னு  தெரிஞ்சிகிட்டேன்.
ஏன் சாப்பாட வச்சி அவன கரெக்ட் பண்ணலாம்னு சொன்னேன்னா.. அவங்க வீட்ல விதம் விதமா தின்னு வளந்த பய்யன்.. இங்க ஹோட்டல் ல சாப்பாடு ரொம்ப கேவலமா தான் இருக்கும் அதுனால அவன் ரொம்ப மனசு உடஞ்சி பொய் இருந்தான்.. இந்த நேரத்துல அவனுக்கு நாம
நல்ல சாப்பட குடுத்தா அவன ஈஸியா கரெக்ட் பண்ணிடலாம்..


அது மட்டும் இல்லாம அவன் கிட்ட நெறைய தெறமை இருக்கு ஆனா அவன் ரூம் பசங்களும் சரி என்னோட ரூம் பசங்களும் சரி அவன எதுவுமே பண்ண விடுறதும் கிடையாது..அவன் எது பண்ணுனாலும் என்கரேஜ் பண்றதும் கிடையாது.. சோ அவன் பண்றதுக்குலாம் நாம
சப்போர்ட் பண்ணுனா அவன் மனசுல  ஈஸியா இடம் பிடிச்சிரலாம்..


ஒரு நாள் ரூம் பசங்க எல்லாரும் சரக்கடிக்கனும்னு பிளான் பண்ணுனாங்க.. சரக்குன அவங்க பீர் மட்டும் தான் அடிக்க பிளான்.. ஹாட் அடிக்கிற அளவுக்கு பய புள்ளைங்க இன்னும் வளரல..பாலு ஏன் கிட்டயும் கேட்டான் நான் வரல நீங்க அடிங்கன்னு சொல்லிட்டேன்.. நா இது வர
சரக்கு அடிச்சது கிடையாது, ஆனா அடிக்கணும்னு தோணவும் இல்ல அதுனால வரலன்னு சொல்லிட்டேன்..பாலு ராஜா இன்னும் என்னோட ரூம்ல இருக்குற 2 பசங்க எல்லாரும் சேந்து சரக்கடிக்கனும்னு முடிவு பண்ணுனாங்க..எல்லாரும் போய் அவங்களுக்கு தேவையான சரக்க
சாரி பீர் பாட்டில் வாங்கிட்டு வந்தாங்க.. நைட் ஹோட்டல் போய் சாப்பாடு பார்சல் வாங்கிட்டு வந்தாச்சு .. பீர் அடிச்சிட்டு சாப்பிட்ட தான் உடம்பு வைக்குமாம் (என்ன ஒரு கண்டு பிடிப்பு).. அவங்க பார்சல் வாங்கும் போதே நானும் சாப்டுட்டேன்..


மொத்தமா 5 பீர் பாட்டில் ஒரு ப்ரீசர்.. எல்லாத்தையும் வட்டமா வச்சாச்சு .. அப்றமா பாலு வளச்சி வளச்சி போட்டோ எடுத்தான்..புதுசா குடிக்கிறதுனால பயபுள்ளைக்கு அவ்ளோ சந்தோசம்..நானும் அவனுக பண்றதெல்லாம் பக்கத்துலையே உக்காந்து பாத்துகிட்டே
இருந்தேன்..எல்லாரும் சீர்ஸ் சொல்லி முதல் கப் பீர உள்ள விட்டாங்க.. ஒரு 2 ரவுண்டு போயிருக்கும் குண்டன் உலர ஆரம்மிசிட்டான்..ஆனா எவனும் அத கண்டுக்கவே இல்ல.. பொல்லாதவன் படத்துல கருணாஸ் சொல்லுவான் ல "மச்சி நீ கேளேன் மச்சி நீ கேலேன்னு" அதே
மாதிரி சொல்லிகிட்டே இருந்தான்..


எல்லாரும் குடிச்சி முடிச்சிட்டு படுக்குறதுக்கு ரெடி ஆனாங்க.. ராஜா எப்பவுமே ஏன் பக்கத்துல தான் படுப்பான்.. ஆனா டுடே அவன் ஸ்டெடி இல்ல அதுனால நானே அவனுக்கு பாய் போர்வை எல்லாம் விரிச்சி வச்சேன்.. கொஞ்ச நேரம் மொக்கைக்கு அப்பறமா ஒரு 12 மணி
இருக்கும் வந்து ஏன் பக்கத்துல படுத்தான்..அவன் அடிச்ச பீர் வாசன எனக்கு பிடிக்கவே இல்ல இருந்தாலும் அவன எனக்கு ரொம்ப பிடிக்குமே அதுனால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டேன்..
தூங்க ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல எனக்கு தூக்கம் கலைஞ்சிடுச்சி.. அப்டியே உருண்டு உருண்டு படுத்து கிடந்தேன்.. அப்போம் திடீர்னு ஏன் மேல ஒரு கை வந்து என்னோட வயிர தொட்டுச்சி....


(தொடரும்)

No comments:

Post a Comment